காசாவில் மனிதாபிமான உதவிகளை விரைவுபடுத்த அய்.நா. திட்டம் இஸ்ரேல் தற்காலிகச் சண்டை நிறுத்தம் அறிவிப்பு

1 Min Read

காசா, ஜூலை 28- காசா பகுதியில் இஸ்ரேல் அறிவித்துள்ள புதிய தற்காலிகச் சண்டை நிறுத்தத் தைப் பயன்படுத்தி, பட்டினியால் வாடும் 2 மில்லியனுக்கும் அதிக மான மக்களை இயன்றவரை சென்றடைய அய்க்கிய நாடுகள் சபை தீவிரமாக முயன்று வருகிறது. குறிப்பிட்ட சில வட்டாரங்களில் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் வரை தாக்குதல் நடத்தப்படாது என்று இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், இது மனிதாபிமான உதவிகளை விநியோகிக்க ஒரு வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

உலக உணவு அமைப்பு (World Food Programme – WFP), காசா மக்களுக்கு மூன்று மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் தம்மிடம் இருப்பதாகவும், அவற்றை எடுத்துச் செல்லும் முயற்சிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் விதித் திருந்த எல்லைக் கட்டுப்பாடுகள் நேற்று (27.7.2025) நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, நூற்றுக்கும் அதிகமான லாரிகளில் உணவும், மருந்துகளும், எரிபொருளும் காசாவுக்குள் செல்லத் தொடங்கியுள்ளன என்றும் உலக உணவு அமைப்பு கூறியுள்ளது.

காசா பகுதியில் நிலவும் கடுமையான உணவுப் பற்றாக்குறை மற்றும் மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியில், இந்த தற்காலிகச் சண்டை நிறுத்தமும், உதவிப் பொருட்கள் விநியோகமும் ஒரு சிறிய ஆறுதலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *