நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

1 Min Read

புதுடில்லி, ஜூலை 28 நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் கடந்த 21 ஆம் தேதி தொடங்கியது.

இதில் பஹல்காம் தாக்குதல், ‘ஆபரேஷன் சிந்தூர்’, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகியவை பற்றி விவாதம் நடத்தவேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தினமும் குரல் கொடுத்து வந்தனர்.

இதனால் கடந்த வாரம் முழுவதும் அலுவல் எதையும் கவனிக்காமல் நாடாளுமன்றம் முடங்கி யது. இதையடுத்து இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது.

பஹல்காம் தாக்குதல், ‘ஆபரேஷன் சிந்தூர்’ ஆகிய பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (28.7.2025) முதல் விவாதத்தைத் தொடங்க இருப்பதாக ஆளும் கட்சி தெரிவித்தது. இதை எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொண்டன.

அதன்படி மக்களவையில் இன்றும், மாநிலங்க ளவையில் நாளையும் (29.7.2025) விவாதம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இரு அவைகளிலும் தலா 16 மணி நேரம் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நேரம் நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதையடுத்து நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக எதிர்க்கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்கள் இன்று (28.7.2025) காலையில் நாடாளுமன்றத்துக்கு வந்தனர். காலை 10.30 மணியளவில் அவர்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒன்று கூடினார்கள்.

அப்போது பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பி னர்கள் அனைவரும் பங்கேற்றனர். அப்போது அவர்கள் ஆளும் கட்சியை கண்டித்து பல்வேறு முழக்கங்களை எழுப்பினர். இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (28.7.2025) காலையில் பரபரப்பு நிலவியது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *