கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வுப் பரப்புரை நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு, நீதிமன்ற சாலை பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பரப்புரையைத் தொடங்கிவைத்தார்.
பொதுமக்களுக்கு தந்தை பெரியாருடைய கருத்துகள் அடங்கிய நூல்கள், துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. கழக காப்பாளர் ம.தயாளன், பொதுக்குழு உறுப்பினர் மா.மணி மு.இராசசேகர், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக மகளிரணி தலைவர் சு.இந்திராமணி, மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ், தோவாளை ஒன்றிய தலைவர் மா. ஆறுமுகம்,
கழகத் தோழர்கள் கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, எ.ச. காந்தி, மு.குமரிச் செல்வன் மற்றும் பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.