வேதாரண்யம் ஒன்றிய கலந்துரையாடலில் தீர்மானம்

viduthalai
2 Min Read

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’
நூற்றாண்டு நிறைவு விழா தொடர் கூட்டங்கள் நடத்தப்படும்

வேதாரண்யம், ஜூலை 1- வேதாரண்யத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை அழைத்து  சுயமரியாதை இயக்க நூற்றாண்டு குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தை  எழுச்சியுடன் நடத்திட கலந்துரையாடல் கூட்டத் தில் முடிவு செய்யப்பட்டது.

29-06-2025  ஞாயிற்றுக்கிழமை காலை  10.30 மணியளவில் வேதாரண் யம் மேலத்தெரு. தமிழ் தென்றல் வளாகத்தில்   எழுச்சியுடன் வேதை ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

வேதை ஒன்றிய தலைவர் கி.இராஜேந்திரன், தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் கி.சுர்ஜித், அனை வரையும் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், கூட்டத்தின் நோக்கத் தினை விளக்கி பேசினார்.

நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கவிஞர் சு.புயல்குமார், மாநில இளை ஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, நாகை நகர தலைவர்  தெ.செந்தில்குமார், ஆகி யோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் மாவட்ட இளைஞரணி செயலாளர் கு.கமலராஜன்,  பகுத் தறிவு ஆசிரியரணி  ஆ.பா.தர்மதுரை, வேதை ஒன்றிய இளைஞரணி செயலாளர் ப.திலிபன், ஆர்.கபிலன், தி.கவிச்செம்மல், ஆர்.பாரிவள்ளல், கை.தனுஷ் சிறீராம், இர.கவிப்பிரியா, த.தமிழரசன், வீ.வெங்கடேஷ், சே.திராவிடமணி, நா.முகேஷ், வ.வே.சிறீதர், சு.சக்திவேல், மன்னார்குடி மாவட்ட மாணவர் கழக செயலாளர் ச.சாருகான். ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்று சிறப்பித்தனர். இறுதியாக வேதை ஒன்றிய செயலாளர் அண்டர்காடு மு.அய்யப்பன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்ற தலைமை செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

வேதாரண்யம் ஒன்றியத்தில் வேதாரண்யம், அண்டர்காடு, ஆயக்கராயன்புலம், கரியாபட்டினம், வாய்மேடு, ஆகிய ஊர்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிளை கழகங்களில் கழக சுயமரியாதை இயக்க நூற்றாண்டு குடி அரசு  நூற் றாண்டு நிறைவு விழா கூட்டங்களை தொடர்ந்து நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

திராவிடர் கழகத்தில் புதிதாக இணைந்துள்ள இளைஞர்கள். மாணவர்கள். கழக ஏடுகளான விடுதலை உண்மை இதழ்களை வாங்கி படிப்பது என முடிவு செய்யப்படுகிறது.

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தை வேதா ரண்யத்தில் நடத்திட திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தேதி ஒதுக்கி தருமாறு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் தீர்மானிக் கப்படுகிறது.

வேதாரண்யம் பகுதியில் விரைவில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை மிகச் சிறப்பாக நடத்துவது எனவும். 100 நபர்களுக்கு குறையாமல் இளைஞர்கள், மாணவர்கள், பங்கேற்கச்செய்வது என முடிவு செய்யப்படுகிறது.

புதிய பொறுப்பாளர்கள்

திராவிடர் கழகம்.

வேதை நகர தலைவர் சக்திவேல், நகர செயலாளர் தமிழரசன்,

இளைஞரணி.

ஒன்றிய இளைஞரணி செயலா ளர் தேத்தாக்குடி  ஆர். கபிலன், ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் அண்டர்காடு தனுஷ் சிறீராம்,

திராவிட மாணவர் கழகம்

ஒன்றிய மாணவர் கழக துணை செயலாளர் தென்னம்புலம் கவி பிரியன்,

கிளைக் கழகம்

தகட்டூர் கிளை செயலாளர் பாரி வள்ளல்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *