ராமேஸ்வரம், ஜூன் 29 எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரை, ஒரு படகுடன் இலங்கை கடற்படை கைது செய்தது. மீன்பிடித்துவிட்டு இன்று (29.6.2025) அதிகாலை கரை திரும்பிக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை கைது செய்தது. வடக்கு மன்னார் கடற்பரப்பில் ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்களை கைது செய்தனர். விசாரணைக்குப் பின் மீனவர்கள் 8 பேரும் மன்னார் மீன்வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்படுவர் என தகவல்கள் கூறுகின்றன.