ஹிந்து மதத்தை பாதுகாக்க கோரிய மனு தள்ளுபடி

1 Min Read

இந்தியா

புதுடில்லி, நவ. 12 – ஹிந்து மதத்தை பாதுகாப்பது தொடர்பாக வழிகாட்டுதல்களை வகுக்க ஒன்றிய அரசுக்கு உத்தர விடக்கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் 10.11.2023 அன்று தள்ளுபடி செய்தது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர், உச்ச நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், நம் நாட்டில் ஹிந்து மதத்தை பாதுகாக்க வழிகாட்டுதல்களை வகுக்கும்படி ஒன்றிய அரசுக்கு உத்தர விடக் கோரி இருந்தார்.

இந்த மனு, நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு பிறப்பித்த உத்தரவு:

நீங்கள் ஒரு விஷயத்தை செய்துவிட்டு அதுகுறித்து பிரசாரம் செய்தால், உங்களை யாரும் தடுக்கப் போவ தில்லை. ஆனால், நீங்கள் நினைப்பதை அனைவரும் செய்ய வேண்டும் என நீங்கள் கூற முடியாது.

நீங்கள் இன்றைக்கு வைக்கும் கோரிக்கையை போல, இசுலாம் மற்றும் கிறித்துவ மதங்களை பாதுகாக்க வழிகாட்டுதல்களை வகுக்கும்படி வேறு சிலர் கோரிக்கை வைக்கலாம். எனவே, உங்கள் கோரிக்கை ஏற்புடையது அல்ல. உங்கள் மனு தள்ளு படி செய்யப்படுகிறது.

-இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *