கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 25.6.2025

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* ஹிந்து முன்னணி நடத்திய முருகன் மாநாட்டில், தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரை இழிவுபடுத்தி வெளியிடப்பட்ட காணொலி: பாஜக, அதிமுக மீது விமர்சனத்தை எழுப்பும் திமுக.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* நீதிபதி வர்மா வீட்டில் பணம் பறிமுதல் செய்தது குறித்து எஃப்அய்ஆர் பதிவு செய்யாதது ஏன்..? நாடாளுமன்ற குழு கேள்வி.

* மகாராட்டிரா தேர்தல் மோசடி குற்றச்சாட்டு: பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மதுரையில் நடைபெற்ற ஹிந்து முன்னணியின் முருகன் மாநாட்டில் பங்கேற்ற அதிமுக தலைவர்கள். தந்தை பெரியார், அண்ணா குறித்த  காணொலியால் அதிமுகவுக்கு சிக்கல்.

தி டெலிகிராப்:

* ‘2024 மக்களவை தேர்தலுக்கும் மகாராட்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கும் இடையே வெறும் 5 மாதங்களில், மகாராட்டிரா முதலமைச்சரின் சொந்த தொகுதியில் (நாக்பூர் தென்மேற்கு) 8% வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். சில வாக்குச்சாவடிகளில் 2050% வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தெரியாத நபர்கள் வாக்களித்ததாக பூத் முகவர்கள் தெரிவித்தனர் என ராகுல் குற்றச்சாட்டு.

தி இந்து:

* ஜூலை 1 முதல் ரயில் கட்டணத்தை  உயர்த்த ரயில்வே பரிசீலனை

* மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு, தமிழ்நாடு அரசாணை வெளியிட்டது.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *