டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* “தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் வடிவில் வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் மறுக்கிறது. மேலும், வாக்குப் பதிவு மய்யங்களில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை 45 நாட்களுக்கு பிறகு அழித்து விடுமாறும் தற்போது உத்தரவிட்டுள்ளது. இது ஆதாரங்களை அழிக்கும் செயல் ஆகும். இதன்மூலம் வெற்றியை முன்கூட்டியே தீர்மானித்திருப்பது தெளிவாக தெரிகிறது. இந்த செயல் ஜனநாயகத்துக்கு விஷம் போன்றது” என நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனம்
தி இந்து:
* அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக மாநில பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை கூறியது குறித்து விசாரணை நடத்த காவல்துறை இயக்குநர் (டிஜிபி) மற்றும் சென்னையில் உள்ள கோட்டூர்புரம் காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ’வெற்று முழக்கங்களில் தேர்ச்சி பெற்றவர்’ பிரதமர் நரேந்திர மோடி; ஆனால் எந்த தீர்வுகளையும் வழங்கவில்லை என்றும், ‘மேக் இன் இந்தியா’ முயற்சி இருந்தபோதிலும் இந்தியாவின் உற்பத்தி வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம்.
* ‘ஈரான், காசா விவகாரத்தில் இந்தியா மவுனம் காப்பது, குரல் இழப்பு மட்டுமல்ல, விழுமியங்களின் சரணாகதியும் கூட’ என காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி கண்டனம்
டைம்ஸ் ஆப் இந்தியா:
* டில்லி பல்கலைக்கழகம், இட ஒதுக்கீடு பிரிவுகளின் கீழ் உள்ள விண்ணப்பதாரர்கள், இளங்கலை சேர்க்கைக்கான அதன் பொதுவான இருக்கை ஒதுக்கீடு முறை (CSAS) போர்ட்டலில் பதிவு செய்யும் போது, அவர்களின் துணை ஜாதி விவரங்கள், எடுத்துக்காட்டு: தோபி, மோச்சி, நை, மாலி, கசாய் அல்லது பக்கீர் போன்ற அவர்களின் துணை ஜாதியை குறிப்பிட வேண்டும். காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
* ’பொருளாதார அரிய வகை ஏழைகள்’ ஒதுக்கீட்டைப் பெறும் உயர் ஜாதியினர், கடந்த இரண்டு ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் போட்டியின் முதன்மை தேர்வுகளில் பின்தங்கிய வகுப்புகளை விட பின்தங்கி உள்ளனர். ஆனால் போட்டியின் ‘நேர்காணல்’ பகுதியில் பிற்படுத்தப்பட்டோரை விட அதிக மதிப்பெண் பெற்றதன் மூலம் இறுதித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அண்மையில் வெளிவந்த யு.பி.எஸ்.சி. 2024 தேர்வு முடிவுகள் மூலம் அம்பலம்.
– குடந்தை கருணா