* ஒன்றிய அரசு நம் மீது தொடுப்பது பண்பாட்டுப் போர், கருத்தியல் போர், கலாச்சாரப் போர். கீழடி அறிக்கையை ஏற்காவிட்டால் ஒன்றிய பாஜகவை நிலைகுலையச் செய்வோம், மதுரையில் திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருச்சி சிவா, எம்.பி. பேச்சு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
*மீண்டும் ஹிந்தி கட்டாயமா? சத்தமில்லாமல் மகாராட்டிர அரசு போட்ட உத்தரவு! எதிர்க்கட்சிகள் ஆவேசம்.
*மக்கள் தொகை கணக்கெடுப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெலங்கானா அரசு திட்டம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட ஜூன் 25ஆம் தேதியை அரசியலமைப்பு சட்ட படுகொலை தினமாக அறிவித்த ஒன்றிய அரசுக்கு மம்தா கடும் எதிர்ப்பு; “அரசமைப்பை மதிக்காதவர்கள் இப்போது அதன் ஒழுக்கத்தை நிலைநிறுத்துவது பற்றி பேசுகிறார்கள். இது ஒரு கேலிக்கூத்து,” என காட்டம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நான் பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான போரை நிறுத்தினேன். நான் பாகிஸ்தானை நேசிக்கிறேன்” என்று டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறினார். தொலைபேசி அழைப்பில் டிரம்ப் மத்தியஸ்தம் செய்வதை மறுத்த பிறகு, இந்தியா-பாகிஸ்தான் போரை தடுத்ததாக டிரம்ப் மீண்டும் கூறுகிறார்
தி இந்து:
* சீல் வைக்கும் அதிகாரம் அமலாக்கத்துறை (ED)-க்கு இல்லை: சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையின் போது ஒரு வளாகம் பூட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், அமலாக்க இயக்குநரகம் (ED) சீல் வைக்கும் அதிகாரம் இல்லை என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ASG) எஸ்.வி. ராஜு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒப்புதல்.
* சென்னை மெட்ரோ தண்ணீர் நகரம் முழுவதும் 50 இடங்களில் ஸ்மார்ட் தண்ணீர் ஏடிஎம்களை அமைத்துள்ளதால், சென்னையில் வசிப்பவர்கள் இப்போது பாதுகாப்பான குடிநீரை இலவசமாக பெற முடியும். மெரினாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடிநீர் வசதியை திறந்து வைத்தார்.
தி டெலிகிராப்:
* இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை தடுத்ததற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெருமைப்படுவதாக கூறும் காணொலியை காங்கிரஸ் தலைவர் பவன் கேரா வெளியிட்டார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ஏர் இந்தியா ஜூலை நடுப்பகுதி வரை “குறைந்தபட்சம்” உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அகல-உடல் விமானங்களில் அதன் பன்னாட்டு சேவைகளை 15% குறைக்க முடிவு.
– குடந்தை கருணா