தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு ஆய்வு மேற்கொண்டு மழைநீர் வடிகால்வாயினைப் பார்வையிட்டனர்

1 Min Read

அரசியல்

தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, பெருங்குடி மண்டலம், புழுதிவாக்கம், வார்டு-186க்குட்பட்ட சதாசிவம் நகரில் ஆய்வு மேற்கொண்டு மழைநீர் வடிகால்வாயினைப் பார்வையிட்டனர். 

இந்நிகழ்வின்போது, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் 

ச.அரவிந்த் ரமேஷ், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் ராஜேஷ் லக்கானி,  மின் தொடர மைப்பு கழக மேலாண்மை இயக்குநர் 

இரா.மணிவண்ணன், மண்டலக் குழுத் தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் ஜெ.மணிகண்டன், சமீனா செல்வம் மற்றும் மண்டல அலுவலர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *