லால்குடி, ஜூன் 16- 15.06.2025 அன்று டோல்கேட் பார்கவன் டவரில் காலை 11 மணியளவில் பெரியார் பெருந்தொண்டர் போஸ்டல் ராமசாமியின்ன் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியார் வீர விளையாட்டு கழக தலைவர் பேரா .ப.சுப்ரமணியன் படத்தினை திறந்து வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் மண்டல பொதுக்குழு உறுப்பினர் ப.ஆல்பர்ட், மண்ணச்சநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் கதிரவன், துறையூர் சட்ட மன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், டாக்டர் பார்கவன் பச்சமுத்து, பொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி, லால்குடி மாவட்ட செயலாளர் ஆ.அங்கமுத்து, மாவட்ட துணை தலைவர் ஆசைத்தம்பி, மாவட்ட துணை செயலாளர் சித்தார்த்தன், மண்ணச்சநல்லூர் ஒன்றிய தலைவர் கு.ப.பெரியசாமி, பெரியார்பெருந்தொண்டர் பிச்சாண்டர்கோயில் கலியபெருமாள் விடுதலை புறம் வான்முடிவள்ளல் பெருவளப்பூர் சி. வீரமணி லால்குடி ஒன்றிய தலைவர் பிச்சைமணி புள்ளம்பாடி ஒன்றிய தலைவர் திருநாவுக்கரசு, ஒன்றிய நகர செயலாளர் புரட்சி பாடகர் கவிஞர் சி.பொற்செழியன் முசிறி நகரத் தலைவர் ரத்தினம், திருவரங்கம் மோகன்தாஸ், கனகராஜ், பாச்சூர் அசோகன், காட்டூர் பிரபாகரன் கிளைக்கழகதலைவர், லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள், மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள திராவிடர் கழக தோழர்கள் மற்றும் திமுக தோழர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.போஸ்டல் ராமசாமியினுடைய மகன்கள் மனோகரன் ஒருங்கிணைத்தார், செல்வராஜ் நன்றியுரை கூறினார். கரிகாலன் மற்றும் ராஜன் வரவேற்று சிறப்பு செய்தனர்.