டேராடூன், ஜூன் 16- இமய மலைச்சாரலில் உள்ள உத்தராகண்ட் மாநிலத்தின் குப்தகாசியில் இருந்து கேதார்நாத் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த “ஆர்யன் ஏவியே ஷன்” நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று (15.6.2025) அதிகாலை 5.20 மணியளவில் கவுரி குண்ட் – சோன்பிரயாக் வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
7 பேர் மரணம்
மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், ஹெலிகாப்டரில் பயணித்த விமானி, 10 வயது குழந்தை உள்பட 7 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹெலிகாப்டர் விழுந்த இடம் செங்குத்தான மலைப்பகுதி ஆகும். மாநில மற்றும் தேசியப் பேரிடர் படையினர் மீட்புப் பணியில் கடுமையாக போராடினாலும், மீட்புப் பணி சவாலானதாகவே இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நேற்று (15.6.2025) மாலை வரை உடல்கள் மீட்கப்படவில்லை என செய்திகள் வெளியாகின. இதனால் சார் தாம் யாத்திரையில் மறு அறிவிப்பு வரும் வரை ஹெலிகாப்டர் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று உத்தராகண்ட் அரசு அறிவித் துள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தின் இமயமலைச்சாரலில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத்திற்கு உள்ளிட்ட கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்லும் பயணி களுக்கு ஹெலிகாப்டர் சேவை வழங்கப் படுகிறது. இதற்காக பன்மடங்கு கட்ட ணம் வசூலிக்கப் படுகிறது.
5 ஆவது ெஹலிகாப்டர் விபத்து
பாஜக ஆதரவு பெற்ற நிறு வனங்கள் சில ஹெலிகாப்டர் சேவையை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இமயமலைப் பகுதியில் ஹெலிகாப்டர் இயக்க விமானி களுக்கு போதுமான அனுபவம் இருக்க வேண்டும் என்ற விதி கடந்த காலங்களில் இருந்தே பின்பற்றி வரப்படுகிறது. ஆனால் உத்தராகண்ட் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் ஹெலிகாப்டர்களை இயக்கும் விமானிகளுக்கு அனுபவம் குறித்த சான்றிதழ் கூட பெறாமல், ஹெலிகாப்டர்களை இயக்க உத்தராகண்ட் பாஜக அரசு அனுமதித்து வருகிறது. இதனால் கடந்த 6 வாரங்களில் உத்தரகண்டில் இதுவரை 5 ஹெலிகாப்டர் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. 10–க்கும் மேற்பட்டோர் பலி யாகியுள்ளனர்.