இலால்குடி, ஜூன் 7- இலால்குடி கழக மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 1.6.2025 அன்று மாலை 5 மணிக்கு நடை பெற்றது.
கூட்டம் தொடங்கும் முன்பு பெரியார் சிலை இடம் மாற்றம் செய்ய இருக்கும் இடத்தை கழகத் தோழர்களோடு மாவட்ட செயலாளர் அங்கமுத்து ஆய்வு செய்தார். தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கலந் துரையாடல் கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட துணை செயலாளர் வெ. சித்தார்த் தன் தலைமை வகித்தார்.
புள்ளம்பாடி ஓன்றிய கழக தலைவர் மு. திரு நாவுக்கரசு முன்னிலை வகித்தார். மணச்சநல்லூர் ஓன்றிய தலைவர் பாலச் சந்தர், பொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி, திருமங்கலம் பெரியார் பெருந்தொண்டர் ஜாதி ஓழிப்பு வீரர் மருதை, இலால்குடி காட்டூர் கிளை கழகத் தலைவர் மணிவாசகம், மணச்சநல்லூர் சிவசங்கர், காட்டூர் பிரபாகரன், பெருவளப்பூர் சி. வீரமணி, விடுதலைபுரம் இளைஞரணித் தலைவர் வான்முடிவள்ளல், இளை ஞரணி அமைப்பாளர் இசைவாணன், கவிஞர் சி.பொற்செழியன் ஆகி யோர் கலந்து கொண்டு கழக செயல்பாடுகள் பற்றி எடுத்துக் கூறினர். நிறைவாக புள்ளம்பாடி நகர செயலாளர் நன்றியு ரையற்றினார்.