தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்முறை தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதிர்ச்சித் தகவல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஜூன் 25 நாட்டில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாகுபாடுகளை தடுப்பது எப்படி?, அதில் உள்ள சிக்கல்கள் மற்றும் சவால்கள் தொடர்பான ஒரு விவாதத்துக்கு டில்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. இது திறந்தவெளி விவாதமாக இருந்தது. இதில் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் தியானேஷ்வர் எம்.முலே தலைமை தாங்கி பேசும்போது, ‘போதிய சட்டங்கள் மற்றும் சட்ட விதிகள் செயல்படுத்தப்பட்ட போதிலும், நாட்டில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் சமூகங்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் பாகுபாடுகள் இன்னும் நிறுத்தப்படவில்லை. மேற்படி சமூகத்தினரின் சமூக மற்றும் பொருளாதார விடுதலைக்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வன் முறை மற்றும் பாகுபாடு பற்றிய சில சமீபத்திய ஊடக அறிக்கைகளை மேற் கோள் காட்டி, அவர்களது பாதுகாப் புக்கான 1989-ஆம் ஆண்டின் சட்டம் திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்’ என்றும் கேட்டுக் கொண்டார். முன்னதாக விவாத அமர்வை தொடங்கி வைத்த மனித உரிமைகள் ஆணைய இணைச்செயலாளர் தேவேந்திரகுமார், “தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு குறைந்த தண்டனை விகிதம் கவலைக்குரியது” என்று கூறினார். விவாத அமர்வில் ஆணைய பதிவாளர் சுரஜித்டே மற்றும் மூத்த அதிகாரிகள், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், பழங் குடியினர் விவகார அமைச்சக அதிகாரி கள், டில்லி காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *