இவர்கள் ஊழலை ஒழிக்க போகிறார்களாம்! ரூ.5 கோடி லஞ்சம்: அமலாக்கத்துறை அதிகாரி கைது

2 Min Read

புவனேஸ்வர், மே 31 ஒடிசாவில் தொழிலதிபரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறையின் துணை இயக்குநரை, சி.பி.அய்., அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்.

ஒடிசாவின் தேன்கனல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரதிகந்த ராவுத். சுரங்கத் தொழில் செய்து வரும் இவர் மீது எழுந்த புகார் காரணமாக, கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வரும்படி அமலாக்கத்துறையினர் தாக்கீது அனுப்பினர். இதன்படி, புவனேஸ்வரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு ராவுத் சென்றார்.

அங்கு அமலாக்கத்துறை துணை இயக்கு நர் சிந்தன் ரகுவன்ஷி என்பவர், ராவுத்திடம் விசாரணை நடத்தினார். அப்போது, இந்தப் புகாரில் வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க, 5 கோடி ரூபாய் அளிக்கும்படி சிந்தன் ரகுவன்ஷி கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக பாக்தி என்ற அதிகாரியை சந்திக்கும்படி ரகுவன்ஷி, ராவுத்திடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, ரகுவன்ஷி கேட்ட பணத்தை, உடனே அளிக்கும்படி ராவுத்திற்கு, பாக்தி அழுத்தம் கொடுத்தார்.

இவ்வளவு பெரிய தொகையை தர இயலாது என, ராவுத் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரகுவன்ஷி, 2 கோடி ரூபாய் அளிக்கும்படி கேட்டுள்ளார்.

சி.பி.அய்.,யிடம் புகார்

இதற்கிடையே, லஞ்சமாக பணம் கேட்பதாக ரகுவன்ஷி மீது சி.பி.அய்.,யில் ராவுத் புகார் அளித்தார். ரகுவன்ஷியை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்ட சி.பி.அய்., அதிகாரிகள், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டை, ராவுத்திடம் அளித்தனர்.

ரகுவன்ஷி கைது

இதன்படி, முன்பணமாக 20 லட்சம் ரூபாயை ராவுத் அளிக்கும்போது,
சி.பி.அய்., அதிகாரிகள் ரகுவன்ஷியை கைது செய்ததுடன், அவருக்கு உதவிய பாக்தி என்பவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமலாக்கத்துறையை கண்டு எதிர்க்கட்சி கள் நடுங்கி வருகிறது என்று பாஜக தலைவர்கள் பேசி வரும் நிலையில், அம லாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஒவ்வொருவராக கைதாகி வரும் நிகழ்வுகள் விவாதங்களாக வெடித்திருக்கிறது. கடந்த 18 ஆம் தேதி கேரள மாநிலத்தில் அமலாக்கத்துறை அதிகாரி மீது அம்மாநில லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்ப திவு செய்திருந்தனர். தொழிலதிபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கொச்சியை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு இதேபோல இமாச்சலப்பிர தேசத்தை சேர்ந்த அமலாக்கத்துறை துணை இயக்குநர் ஒருவரை சிபிஅய் அதிகாரிகள் ரூ.55 லட்சம் லஞ்சமாக பெற்ற வழக்கில் கைது செய்திருந்தனர். அதற்கும் முன்னர் தமிழ்நாட்டில் அங்கித் திவாரி என்கிற அமலாக்கத்துறை அதிகாரி லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *