நேப்பியதோ, மே 28– மியான்மரில் இருந்து படகு மூலம் தப்ப முயன்ற 400 அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
இன மோதல்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சி நடக்கிறது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ராணுவ அரசாங்கத்திற்கும், அந்த நாட்டில் வசித்து வரும் சிறுபான்மையினத்தவர்களான ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையேயும் தொடர் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அசாம், அருணாசல பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட கிழக்கு மாநிலங்கள் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவினர்.
இதனை தடுக்கும் வகையில் இந்திய அரசாங்கம் புதிய குடியேற்ற சட்டத்தை அமல்படுத்தியது. இதனைதொடர்ந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் கடல் மார்க்கமாக இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகிறார்கள்.
400 அகதிகள் பலி
இந்த நிலையில் மியான்மரில் வசித்து வரும் 400-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படகுகள் மூலமாக வேறுநாடுகளுக்கு தப்பி செல்ல முடிவு செய்தனர்.
இதற்காக 2 படகுகள் மூலமாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக சென்ற படகு வங்கக்கடல் வழியாக நடுக்கடலில் சென்று கொண்டிருந்தது. அப்போது கடலில்மோசமான வானிலை நிலவியது. தொடர்ந்து சூரைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதில் அந்த இரண்டு படகுகளும் காற்றில் சிக்கி நடுக்கடலில் கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து படகில் பயணித்த பெண்கள், குழந்தைகள் உள்பட 400க்கும் மேற்பட்டவர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக அய்.நா. அமைப்பு அளித்துள்ள தகவலின்படி மியான்மரில் இருந்து 5 கடந்த 9ஆம் கடல் மார்க்கமாக கடந்த தேதி வேறுநாடுகளுக்கு படகுகள் மூலமாக தப்பி செல்ல முயன்றபோது நீரில் மூழ்கி 427 பேர் செத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.