140 கோடி இந்திய மக்களும் அவதி 11 ஆண்டுகால மோடி ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுகிறது காங்கிரஸ் தலைவர் கார்கே கடும் தாக்கு

2 Min Read

புதுடில்லி, மே. 27- பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சி யால் 140 கோடி மக்களும் சிரமப்படுகிறார்கள். அறிவிக்கப் படாத அவசர நிலை நிலவு கிறது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

கெட்ட கனவு

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, முதல்முறையாக 2014-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி பதவியேற்றது. நேற்றுடன் (26.5.2025) 11 ஆண்டுகள் நிறைவடைந்தன.  இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

2014-ஆம் ஆண்டு மே 26. 11 ஆண்டுகளில் பெரிய வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளாகி விட் டன. ‘நல்ல நாட்கள் வரும்’ என்ற வாக்குறுதி, கெட்ட கனவு என்று நிரூபணமாகும் அளவுக்கு நாட்டை மோடி அரசு அழித்துவிட்டது.  இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு அளிப்பதாக கூறினார். ஆனால், உண்மையில், ஏற்ெகனவே இருந்த கோடிக்கணக்கான வேலை வாய்ப் புகளும் காணாமல் போய் விட்டன.

ரப்பர் தோட்டா

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதாக கூறினார். அதற்கு பதிலாக, அவர்கள் ரப்பர் தோட்டாவை சந்திக்க வேண்டியுள்ளது. பெண்களை பொறுத்தவரை, இடஒதுக்கீடு பெற நிபந்தனை விதித்துள்ளார். அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.

‘தாழ்த்தப்பட்டோர், பழங்குடி யினர், இதர பிற்படுத்தப்பட்டோர் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப் படுகின்றன. ‘பொருளா தாரத்தை பொறுத்தவரை, பண வீக்கம் உச்சத்தில் இருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது.

‘மேக் இன் இந்தியா’ திண்டாட்டம் தோல்வியடைந்து விட்டது. ஏற்றத்தாழ்வு உச்சத்தில் இருக்கிறது.இந்தியாவை ‘விஸ்வகுரு’ ஆக்குவதாக வாக்குறுதி அளித்த நிலையில், ஒவ்வொரு நாட்டுடனும் உறவு சீர் குலைந்து விட்டது. ஒவ்வொரு ஜனநாயக தூண் மீதும் ஆர்.எஸ்.எஸ். தாக்குதல் நடத்துகிறது. விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. அமைப் புகளின் தன்னாட்சி அழிக்கப்பட்டு விட்டது.  140 கோடி மக்களில் ஒவ்வொரு பிரிவினரும் சிரமப்படுகிறார்கள். அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அவசரநிலை

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்ப தாவது:- இன்று 2025-ம் ஆண்டு மே 26. அறிவிக்கப்படாத அவசர நிலை அமலுக்கு வந்து 11 ஆண்டுகளாகி விட்டன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *