குடும்ப தலைவிகள் மாதம் ரூ.1000 பெற விண்ணப்பிக்க வேண்டும்! ஓரிரு நாளில் நிபந்தனைகள் வெளியாகிறது

Viduthalai
1 Min Read

சென்னை, ஜூன் 27- குடும்பத் தலைவிகள் மாதம் ரூ.1000 பெற விண்ணப்பிப்பதற்கு ஓரிரு நாளில் நிபந்தனைகள் வெளியாகிறது.

இதுகுறித்து அரசு உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘மகளிர் உரிமை தொகை ரூ.1000 பெறுவதற்கு யார்-யார் தகுதியானவர்கள் என்பதை கண்டறிய வருமானத்தை கணக்கிடுவது முக்கியம் என்பதால் அதை அடிப்படையாக வைத்தும், குடும்ப அட்டையை அடிப்படையாக வைத்தும் பணம் வழங்கப்படும். எனவே, அந்த விதிமுறைகளை அரசு விரைவில் வெளியிட உள்ளது. அதைப் படித்து பார்த்து ஒவ்வொரு குடும்பத் தலைவிகளும் ரூ.1000 பணம் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த மனுக்களை பரிசீலனை செய்து அரசு பணம் ஒதுக்கும். அவை வங்கி கணக்கு மூலம் குடும்ப தலைவிகளுக்கு சென்றடையும் என்றார் அவர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *