கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 25.5.2025

viduthalai
1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* ஒன்றிய அரசின் வருவாயில் மாநிலங்களுக்கு 50 சதவிகித வரி பகிர்வு தேவை:  நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல். பிரதமரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவும் தந்தார்.

* ஈ.டி. என்ன மோடியே வந்தாலும் நாங்கள் பயப்பட மாட்டோம். – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள், நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் டில்லியில் மே 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ராகுல் காந்தி கலந்து கொள்வார் என்றும் தகவல்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* தெற்கில் தமிழ்நாடு மற்றும் தெலங்கானா முதல் வடக்கில் பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் வரை, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தை பயன்படுத்தி தங்கள் கோரிக்கைகள் குறித்து ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்த்தனர்.

தி டெலிகிராப்:

* 96 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீடு சரிவு குறித்து கவலை; “விஷயங்கள் நன்றாக இல்லை,” என்று மும்பையைச் சேர்ந்த ஒரு நிதி மேலாளர் கூறினார், இந்தத் தரவு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் ஆர்வமின்மையை காட்டுகிறது என்று வாதிட்டார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்குமாறு வலியுறுத்தினேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி டில்லியில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

*என்.டி.ஏ. கூட்டணிக் கட்சிகளின் முதலமைச்சர்கள் நிதிஷ் குமார், ரங்கசாமி உள்ளிட்ட அய்ந்து மாநில முதலமைச்சர்கள் – மம்தா, பினராயி விஜயன் மற்றும் சித்தராமையா –  நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

.– குடந்தை கருணா

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *