சென்னை வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘‘உலகெங்கும் கலைஞர்’’ எனும் நூலினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, பெரியார் மணியம்மை பல்கலைக் கழக (நிகர்நிலை) வேந்தர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், தி.மு.க.பொதுச்செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, தி.மு.க. அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், சென்னை வளர்ச்சிக் கழகத் தலைவரும், ‘சட்டக்கதிர்’ ஆசிரியரும், நூல் தொகுப்பாசிரியருமான டாக்டர் வி.ஆர்.சம்பத், தி.மு.க. வழக்குரைஞரணி தலைவர் ஆர்.விடுதலை மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர் (சென்னை அண்ணா அறிவாலயம், 22.5.2025).