கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 23.5.2025

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை

* டாஸ்மாக்கில் திடீர் சோதனை (ரெய்டு) நடத்தியது வரம்பு மீறிய செயல் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு: கூட்டாட்சித் தத்துவத்தை சிதைத்து விட்டதாக கடும் கண்டனம் – உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு திமுக வரவேற்பு.

* ஒரு மாதம் கடந்தும், பஹல்காம் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இன்னமும் பாதுகாப்பு படையினரிடம் பிடிபடாமல் உள்ளனர்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்

* இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் என்னால் தான் நடந்தது, எட்டாவது முறையாக டிரம்ப் அறிவிப்பு. இது குறித்து மோடியின் விளக்கம் என்ன? காங்கிரஸ் கேள்வி.

* ஜாதிவாரி கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் ஜாதிகள் இடையே உள்ள பிற்படுத்தப்பட்ட தன்மையை தெரிந்து கொள்ள குறியீடு உருவாக்கப்படும், தெலங்கானா அரசு முடிவு.

தி இந்து

* துணைவேந்தர் நியமனங்கள் குறித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை உண்மையில் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது, ‘தி இந்து’ தலையங்கம் கண்டனம்.

.– குடந்தை கருணா

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *