கு.வெ.கி. ஆசான் அவர்களின் அருமைச் செல்வன் செந்தில் மறைந்தாரே! கழகத் தலைவர் ஆழ்ந்த இரங்கல்

1 Min Read

கோவை பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் அவர் களின் அருமை மகனும், அடக்கமும், பண்பும் நிறைந்த பண்பாளரும், கொள்கையாளருமான கு.வெ.கி.ஆ.செந்தில் (வயது 61) அவர்களின் எதிர்பாராத மறைவு (17.5.2025) அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
தொடர்ந்து அவர்களின் குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்து வரும் இழப்புகள் பெரும் துயரத்தை அளிக்கின்றன. பேராசிரியர் ஆசான் அவர்களது வாழ்விணையர் சாரதா மணி , மறைந்த செந்தில் ஆகியோர் அருமையாக தாம் சேமித்து வைத்த நூல்களை எல்லாம் நமது பெரியார் நூலக ஆய்வகத்திற்கு வழங்கி மகிழ்ந்தவர்கள். அடக்கம் மிகுந்த பண்பாளர், கொள்கை சீலர் செந்தில் மறைவால் பெரும் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் அவரது வாழ்வு இணையர் சுதா, மகள் சாலினி ஆகியோருக்கும், குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கழகத் தோழர்கள் திரளாகச் சென்று இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்று கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்துவார்கள்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

18.5.2025

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *