குஜராத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி தேர்வெழுதவே இல்லை என்பதால் ‘தேர்ச்சியில்லை’ (ஃபெயில்) என முடிவு வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அம்மாணவி, இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலரிடம் புகாரளிக்க, சிசிடிவியை ஆய்வு செய்ததில், அம்மாணவி அனைத்துத் தேர்வுகளையும் எழுதியது உறுதியாகியுள்ளது. அதேநேரம், இந்த தேர்வை எழுதாத ஒரு மாணவர் 52% மதிப்பெண் குவித்துள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.