புதுடில்லி, மே 9 இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் தவறான வதந்திகள் பரப்பப்படுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை தொடர்ந்து மக்கள் அச்சமடைய வேண்டாம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்ற தகவலை இந்தியன் ஆயில் நிறுவனம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது. பதற்றம் வேண்டாம். நாடு முழுவதும் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. அனைத்து விற்பனை நிலையங்களிலும் எரிபொருள் மற்றும் LPG உடனடியாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.