மேதின நாள் விழா பிரச்சார பொதுக்கூட்டம்

1 Min Read

மணப்பாறை, மே 7– திருச்சி மாவட்டம் மணப்பாறையில் திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் புரட்சியாளர் அம்பேத்கர் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் – மே நாள் விழா பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ரெ.பாலமுருகன். மணப்பாறை ஒன்றிய தலைவர் வரவேற்புரையாற்றினார். மணப்பாறை நகர செயலாளர் சி.எம்.எஸ்.ரமேஷ் தலைமையேற்றனர். துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார்.

ஞா. ஆரோக்கியராஜ் திருச்சி மாவட்ட தலைவர்.  சு. மகாமணி. மாவட்ட செயலாளர், துரை.காசிநாதன் திமுக தலைமைக் கழக சொற்பொழிவாளர், வழக்குரைஞர்.துரை.அழகிரி ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் மணப்பாறை, ரெஜினா பால்ராஜ் திருச்சி மாவட்ட மகளிர் அணி தலைவர் முன்னிலையேற்றனர். கழக நிர்வாகிகள் தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.

இறுதியாக மணப்பாறை ஒன்றிய செயலாளர் வீ.அசோக் நன்றியுரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *