புதுச்சேரி, மே 6- திராவிடர் கழகம் சார்பில் புதுச்சேரியில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 135 ஆவது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
29-04-2025 அன்று காலை 10.00 மணியளவில் புதுச்சேரி சட்டப் பேரவை அருகிலுள்ள சிலைக்கு மாவட்ட கழகத் தலைவர் வே.அன்ப ரசன் தலைமையில் ஊர்வலமாகச் சென்று மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப் பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்டச் செய லாளர் தி. இராசா, காப்பாளர் இர. இராசு, பொதுக்குழு உறுப்பினர்கள் விலாசினி இராசு, லோ.பழனி, துணைத் தலைவர் மு.குப்புசாமி, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு. தமிழ்ச்செல்வன், செயலாளர் ஆ.சிவராசன், தொழிலாளரணிச் செயலாளர் கே. குமார், நகராட்சி கழக கொம்யூன் பொறுப்பாளர்கள் செ. இளங்கோவன், எஸ். கிருட்டிண சாமி, மு.ஆறுமுகம், கா.நா.முத்துவேல், ஊடகவியலாளர் பெ. ஆதிநாராயணன், பெரியார் சிந்தனையாளர் இயக்க ஒருங்கி ணைப்பாளர் அ.ச.தினா, இரா.வீரா சாமி, தனுஷ்செங்கொடி, ச.சம்ரித் உட்பட பலர் கலந்து கொண்டனர்.