பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தியாகி தகுதி பிரதமருக்கு ராகுல் வேண்டுகோள்

1 Min Read

புதுடில்லி, மே. 3- காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் உயிரிழந்த கான்பூரை சேர்ந்த சுபம் திவிவேதியின் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது சுபம் திவிவேதி உள்பட பஹல்காமில் கொல்லப் பட்டவர்களுக்கு தியாகி தகுதி வழங்க வேண்டும் என அவரது குடும்பத்தினர்  கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று பஹல்காமில் கொல்லப்பட்டவர் களுக்கு தியாகி தகுதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத் தினரின் துயரத் திலும், அவர்களுக்கு தியாகி தகுதி வழங்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையிலும் நான் துணை நிற்கிறேன். அந்த குடும்பங்களின் உணர்வுகளுக்கு மதிப்ப ளித்து பிரதமர் மோடி இந்த மரியாதையை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’என குறிப் பிட்டு உள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *