ஆண்மை என்ற சொல் அழிய வேண்டும்

Viduthalai
0 Min Read

“ஆண்மை” என்னும் பதமே பெண்களை இழிவு படுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதைப் பெண்கள் மறந்து விடக் கூடாது. அந்த ‘ஆண்மை’ உலகில் உள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லை என்பதைப் பெண்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். உலகத்தில் ‘ஆண்மை’ நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தேவரும். பெண்களால் ‘ஆண்மை’ என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலல்லாது ‘பெண்மை’ விடுதலையில்லையென்பது உறுதி. ‘ஆண்மை’ யால்தான் பெண்கள் அடிமையாக்கப்பட்டிருக்கிறார்கள்.

(‘குடிஅரசு’ 12.8.1928′)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *