பாசிச சதியை முறியடிப்போம் – பழனியில் தெருமுனைக் கூட்டம்!

1 Min Read

பழனி, ஏப்.25 பழனி மாவட்ட இளைஞரணி சார்பில் அண்ணல் அம்பேத்கரின் 135 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பாசிச சதியை முறியடிப்போம் என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம்பழனி தந்தை பெரியார் சிலை அருகில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்குப் ப.பாலன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) தலைமையேற்றார், சி.கருப்புச்சாமி (மாவட்ட இளைஞரனி தலைவர்) வரவேற்புரையாற்றினார்.

பழனி மாவட்டச் செயலாளர் பொன்.அருண்குமார்,  மாவட்டத் தலைவர் மா.முருகன், ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மேலும் இந்நிகழ்வில்  பெ.இரணியன், வெற்றிவேந்தன், சி.இராதாகிருட்டிணன்,ச.திரா விடச்செல்வன், குண.அறிவழகன்,  தேவத்தூர் மதிவாணன், செல்லம்மாள், வீரக்குமார், அருண், உள்ளிட்ட கழகத்தோழர்கள் மற்றும் இரணியன், அருந்தமிழன், மாரிமுத்து,   சுப்பிரமணி, அ.தமிழ்முத்து, கா.பாண்டி,பழனி மணி, பழனி ராஜா, திருமாமணி, மருதமூர்த்தி,கார்கி, சங்கர்,சித்தன் உள்ளிட்ட தோழர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர், கூட்ட தொடக்கத்தில் சு.அழகர்சாமி வழங்கிய மந்திரமா?தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக இளைஞரணி செயலாளர் பா.குமார்  நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *