கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 25.4.2025

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

*பஹல்காமில் “பாதுகாப்பு குறைபாடு” – அனைத்துக் கட்சி கூட்டத்தில் சூசகமாக சுட்டிக்காட்டிய ஒன்றிய அரசு; பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் உறுதி! கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம்: சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தி இந்து:

* வக்ஃபு திருத்த மசோதா குறித்து கேரள வக்ஃபு வாரியம், கேரள மாநிலம் இரண்டின் கருத்தி னையும் நாடாளுமன்ற குழு முற்றிலுமாக நிராகரித்து விட்டது, என்று வாதிட்டு கேரள மாநில வக்ஃபு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது

*பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், ஒன்றிய உளவுத்துறையின் தோல்வி என தேஜஸ்வி கண்டனம்; “பிரதமர் மோடி தனது கான்பூர் பயணத்தை ரத்து செய்தார், ஆனால் மாநிலத்தில் தேர்தல் இருப்பதால் பீகார் சென்றார்” எனவும் விமர்சனம்.

* கருநாடகாவின் ஜாதிவாரி சர்வேயால் குழப்பம்: அமைச்சரவையின் முன் விவாதத்திற்கு வரும் மாநிலத்தின் 10 ஆண்டுகால கணக்கெடுப்பு பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது – அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் சமூகங்கள் முதல் பரிந்துரைகளை ஆய்வு செய்யும் வல்லுநர்கள் வரை, ஜாதிவாரி சர்வேயின் உண்மைத்தன்மையை கேள்விக் குள்ளாக்குகின்றனர்,

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *