திண்டிவனம், ஏப். 21- திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கருத்தரங்கம் மாவட்ட துணை தலைவர் ச. அன்புக்கரசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
நகர செயலாளர் சு. பன்னீர்செல்வம் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் இர. அன்பழகன், மாவட்ட செயலாளர் தா,. இளம்பரிதி, மாவட்ட காப்பாளர் செ. பரந்தாமன், நவா. ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர்கள் ப. வில்லவன்கோதை, தா. விஜயலட்சுமி,பக மாவட்ட செயலாளர் கோ. குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் ஏ. பெருமாள் அண்ணல்அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து கருத்துரை வழங்கினார். அவர் பேசும்போது தந்தை பெரியார் அவர்களாலேயே தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர் டாக்டர் அம்பேத்கர் என்றும் இன்றைய பாசிச ஆட்சியில் நாம் பாதுகாப்போடு வாழ்வதற்கு அம்பேத்கர் எழுதிய அரசமைப்பு சட்டம் தான் காரணம் அதுமட்டுமின்றி திராவிட மாடல் ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் சட்ட மன்றத்தில் நிறைவேற்றிய 10 மசோதாக்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியால் கிடப்பில் போடப்பட்டது அந்த மசோதாவை நிறைவேற்ற முதலமைச்சர் நீதிமன்றத்திற்கு சென்று நீதிமன்ற தீர்ப்பின் மூலம் இன்று சட்டவடிவ மாக்கப்பட்டது. அப்படி சட்டவடிவமாக்கப்பட காரணமாக இருந்தது அம்பேத்கர் அவர்களால் எழுதப்பட்ட சட்டம் என்று பேசினார்.
முன்னதாக தலைமையுரையாற்றிய துணைத் தலைவர் ச. அன்புக்கரசன் பேசும்போது பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சட்டம் இயற்றிய அம்பேத்கரை ஜாதிய தலைவராகவும் வெகுமக்களுக்கான விடிவிற்கு போராடிய தந்தை பெரியாரை கடவுள் மறுப்பாளர் என்ற குறுகிய வட்டத்திலும் அடைத்து ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி, சங்பரிவார் கூட்டங்கள்பிரச்சாரம் செய்கின்றனர் அதை எல்லாம் எதிர்த்து நாம் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் எனவும் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞ ரணி செயலாளர் மு. இரமேஷ், மயிலம் ஒன்றிய தலைவர் இரா. பாவேந்தன், மரக்காணம் ஒன்றிய செயலாளர் ஜெ. கன்னியப்பன்,மானூர் கிளைகழக பொறுப்பாளர் ப. செந்தில்,பக அணி குமார், பாஞ்சலம் தோழர்கள் நா. இராஜாராம், பாஞ்சலம் மாணவர் கழக செயலாளர் பெ. திருமாவளவன், மகளிரணி தோழியர் இ. நிவேதா, பெரியார் பிஞ்சு இ. இனியா, இ. இசைத் தென்றல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நகர இளைஞரணி தலைவர் ஓவியர் செந்தில் நன்றியுரை கூறினார். பாஞ்சாலம் மகளிரணி தோழியர் சாந்தி பெருமாள் அனைவருக்கும் விருந்து வழங்கினார்.