வைத்தியரே, வைத்தியரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்வீர்! கருஞ்சட்டை

1 Min Read

உ.பி.சாமியார் ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர் கெட்டிருக்கிறது. ஆனால் அமித்ஷா இங்கே தமிழ்நாட்டுக்கு வந்து சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறி விட்டுச் செல்கிறார்! சட்டம் ஒழுங்கை காப்பாற்றவேண்டிய உயர்காவல் அதிகாரியே கர்ணி சேனா எனப்படும் ஜாதிய அமைப்பின் ஊர்வலத்தில் சீருடையோடு கலந்துகொண்டு முழக்கம் போட்டு கொண்டு செல்கிறார். காரணம் அந்த அதிகாரியும் கர்ணிசேனா அமைப்பினரும் ஒரே ஜாதியாம்! யார் தலையிலும் தலைக்கவசம் இல்லை.
(இடம்: உத்தரப் பிரதேசம் ஆக்ரா 11.04.2025)

கருஞ்சட்டை கருஞ்சட்டை

உத்தரப்பிரதேசம் ஹசாரி பாக் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மனீஷ் ஜைஸ்வால் கத்தி, துப்பாக்கி உள்ளிட்டவைகளை தனது தொகுதி கர்ணி சேனா அமைப்பினருக்கு வழங்கினார். 11.04.2025

இந்த கூட்டம் தான் கூறுகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று. குளிர் சாதனப் பெட்டியில் மாட்டுக்கறி வைத்திருந்தார் என்று கூறி முகமது அட்லாக் என்பவரை அடித்துக் கொன்ற கூட்டம் தான் வன்முறையைப் பற்றிப் பேசுகிறது!
குற்றவாளிகளுக்குத் தண்டனை என்ன தெரியுமா? அரசுப் பணியில் அட்டகாசமாக வேலை பார்க்கிறார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *