புதுடில்லி, ஏப். 12- இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
மருத்துவக் கல்லூரிகள்
நாட்டில் எத்தனை பதிவு செய்த அலோபதி மருத்துவர்கள் மற்றும் ஆயுஷ் மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்ற விவரங்களை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் தற்போது 13 லட்சத்து 86 ஆயிரத்து 150 அலோபதி மருத்துவர்கள் பதிவு செய்துள்ளனர். அதேபோல 7 லட்சத்து 51 ஆயிரத்து 768 ஆயுஷ் மருத்துவர்கள் அதாவது ஆயுர்வேதம், சித்தா, யுனானி, இயற்கை மருத்துவர்கள் உள்ளனர். மேலும் நாட்டின் தற் போதைய மக்கள் தொகை அடிப்படையில் 811 பேருக்கு ஒரு மருத்துவ கள் இருக்கின்றனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு நாட் டில் மொத்தம் 387 கல்லூரி களும், அந்த கல்லூரிகளில் 51 ஆயிரத்து 400 எம்.பி.பி.எஸ். இடங்களும் இருந்தன. ஆனால் 2019ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 536 கல்லூரிகளும், 80 ஆயிரத்து 312 இடங்களும் என உயர்ந்தது. தற்போது 2023-24ஆம் ஆண் டில் மிக அதிகளவாக 722 மருத்துவ கல்லூரிகளும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 297 எம்.பி.பி.எஸ். இடங்களும் இருக்கின்றன.
தமிழ்நாடு முதலிடம்
மேலும் நாட்டிலேயே அதிகபட்சமாக 74 மருத் துவக் கல்லூரிகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. கருநாடகாவில் 70, மராட்டியம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் தலா 68, தெலங்கானாவில் 56, குஜராத்தில் 40, ஆந்திராவில் 37 என்ற எண்ணிக்கையிலும் உள்ளன.
அதேநேரத்தில் எம்.பி.பி.எஸ். இடங்களில் 11 ஆயிரத்து 745 எண்ணிக் கையில் கருநாடகம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்டில் 11 ஆயிரத்து 650 இடங்கள் உள்ளன. வெறும் 95 இடங்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு 2ஆவது இடத்தை பிடித்து உள்ளது. 10 ஆயிரத்து 845 இடங்களுடன் மராட்டியம் 3ஆவது இடத்திலும், 9 ஆயிரத்து 903 எண்ணிக்கையில் உத்தரபிரதேசம் 4ஆவது இடத்திலும் உள்ளது. இவ்வாறு ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.