மோடி அறிவித்த வேலைவாய்ப்பு ஊக்கத் தொகை திட்டத்தின் நிலை என்ன? ராகுல்காந்தி கேள்வி

1 Min Read

புதுடில்லி, ஏப். 12- ஓராண்டுக்கு முன்பு பிரதமர் மோடி அறிவித்த வேலை வாய்ப்பு நிறைந்த ஊக்க தொகை திட்டம் என்ன ஆயிற்று என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். சுமார் ஒன்றரை ஆண்டு ஆன பிறகும் அந்தத் திட் டத்தை ஒன்றிய அரசு வரையறுக்கவில்லை.

வேலையில்லா திண்டாட்டம்
ஒதுக்கப்பட்ட ரூபாய் பத்தாயிரம் கோடி என்ன ஆனது என்று தெரியவில்லை. வேலை யில்லா திண்டாட்டம் குறித்து பிரதமர் மோடி எவ்வளவு அக்கறையா இருக்கிறார் என்பதை இது காட்டுகிறது. பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் புது முழக்கங்களை எழுப்புகிறார். ஆனால் இளைஞர்கள் இன்னும் உண்மையான வேலை வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க உங்களது உறுதியான திட்டம் என்ன ஆனது? இது மற்றொரு வெற்று முழக்கம் தானே பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது மட்டும் கவனம் செலுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாது. சிறு குறு நடுத்தர நிறுவனங்களில் பெரும் அளவிலான முதலீடுகள், நியாயமான சந்தைகள், உள்ளூர் உற்பத்திக்கு ஆதரவு, இளைஞர்களுக்கு திறன் பயிற்சி ஆகியவை மூலம் தான் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.
பிரதமர் மோடி எப்பொழுதும் அதானி மற்றும் தனது பணக்கார நண்பர்களை வளப்படுத்துவதை விட்டுவிட்டு நலிந்த பிரிவினர் வேலை வாய்ப்பு பெறுவதில் எப்பொழுது கவனம் செலுத்துவார் என்று வினாவை எழுப்பி உள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *