அந்நாள்-இந்நாள் (7.4.1979) ஏ.வி.பி. ஆசைத்தம்பி மறைந்த நாள்

1 Min Read

விருதுநகரில் பழனியப்பன்-நாகம்மாள் இணையருக்குப் பிறந்த ஆசைத்தம்பி, மாணவப் பருவத்திலேயே சுயமரியாதை இயக்கத்தின் மீது ஈர்ப்புக்கொண்டார். அவ்வியக்கத்தின் சிற்றிதழ்கள், நாளேடுகளை ஆர்வத்துடன் படித்ததோடு, சுற்றுவட்டாரத்தில் இயக்கத் தலைவர்களின் மேடைப் பேச்சுகளைக் கேட்டு விழிப்புஉணர்வு பெற்றார்.

28.05.1944 அன்று தந்தை பெரியார் தலைமையில் பரமேசுவரி அம்மாளைச் சீர்திருத்தத் திருமணம் செய்துகொண்டார்
தந்தை பெரியார் மீது பேரன்பு கொண்ட ஆசைத்தம்பி தன்னுடைய ஒவ்வொரு இல்லவிழாவிற்கும் தந்தை பெரியாரை அழைக்காமல் இருக்கமாட்டார். மிசாவில் ஓராண்டு சிறையில் இருந்தார். வடசென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் இருந்தார். தனியரசு என்ற இதழை சிறப்பாக நடத்தினார்.
திராவிடக் கொள்கையில் தீவிரமான ஈடுபாடுகொண்ட ஏ.வி.பி.ஆசைத்தம்பி மறைந்த நாள் இன்று.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *