தீண்டாமை ஒழிப்பில் பாபு ஜெகஜீவன்ராமின் பங்களிப்பு
17.9.1974 அன்று அண்ணா மேம் பாலத்திற்கு அருகில், நிற்கும் நிலையி லுள்ள தந்தை பெரியாரின் சிலையை, ஒன்றிய அமைச்சர் ஜெகஜீவன்ராம் அவர்களைக் கொண்டு திறந்து வைக்கப்பட்டது. விழாவில் அன்னை மணியம்மையார் கலந்து கொண்டார்
பாபு ஜெகஜீவன்ராம் 1908 ஆம் ஆண்டு பிறந்தவர். அவரது குழந்தைப் பருவத்தில் தீண்டாமையின் கொடுமை களை நேரடியாக அனுபவித்தார். பள்ளியில் தனக்கென தனி குடிநீர் பானை வைக்கப்பட்டபோது, அதை உடைத்து ஜாதி பாகுபாட்டுக்கு எதிராக தனது முதல் எதிர்ப்பைப் பதிவு செய்தார். இது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
சமூக இயக்கங்கள்
1935 ஆம் ஆண்டு அவர் அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் சங்கத்தை (All India Depressed Classes League) நிறுவினார். இந்த அமைப்பு தீண்டாமையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் சமூக உரிமைகளைப் பெறுவதற்கு ஒரு தளமாக அமைந்தது.
இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்ற போது, காந்தியாரின் தீண் டாமை ஒழிப்பு பிரச்சாரங்களுடன் இணைந்து பணியாற்றினாலும் காந்தியார் அறிமுகப்படுத்திய “ஹரிஜன்” என்ற சொல்லை கடுமையாக எதிர்த்தார். மேலும் ஜெகஜீவன்ராம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரமும் பொருளாதார முன்னேற்றமும் தேவை என்று காந்தியாரிடம் வலியுறுத்தினார்.
அரசியல் மற்றும் சட்டப்பூர்வ மாற்றங்கள்
இந்திய அரசமைப்பு உருவாக்கத்தில் மறைமுகமாக தாக்கம் செலுத்தினார். இந்திய அரசமைப்பு 1950 இல் தீண்டா மையை சட்டவிரோதமாக்கியது (பிரிவு 17) ஒரு முக்கிய மைல்கல் ஆனது. ஜெகஜீவன்ராம் அரசு பதவிகளில் இருந்த போது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் சமூக நலத் திட்டங்களை மேம்படுத்துவதற்கு உழைத்தார்.
ஒன்றிய அமைச்சர் பதவிகளை வகித்தபோது, குறிப்பாக உணவு மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சராக (1967-1970) பசுமைப் புரட்சியை முன்னெடுத்தார். குறிப்பாக தாழ்த்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலமில்லா ஏழை விவசாயிகளுக்கு பூமிஹார் திட்டத்தை கொண்டுவந்தார். இது ஏழை விவசாயிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் பொருளாதார நிலையை உயர்த்தியது.
பாபு ஜெகஜீவன்ராம் “தீண்டாமை” என்ற சமூக அவலத்தை அகற்றுவ தற்கு நேரடியாக சட்டங்களை உருவாக் குவதோடு மட்டுமல்லாமல், தனது வாழ்க்கை மூலமே ஒரு முன்மாதிரியாக விளங்கினார்.
ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக துணைப் பிரதமர் பதவி (1979) வரை உயர்ந்து, ஜாதி அடிப்படையிலான தடைகளை உடைத்தெறிந்தார். அவரது பணிகள் தீண்டாமையை முற்றி லுமாக ஒழிக்காவிட்டாலும், அதற்கு எதிரான சமூக விழிப்புணர்வையும், ஒடுக்கப் பட்டவர்களுக்கு சுயமரியாதை யையும் வளர்ப்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
துணைப் பிரதமர் (1979) போன்ற பதவிகளை வகித்தார். 1971ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்து, பங்களாதேஷ் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். தந்தை பெரி யாரின்மீது அளவற்ற பற்றும் மதிப்பும் கொண்டவராவார்.