சா.ஜே.வே. செல்வநாயகம் நினைவு நாள் இன்று (26.4.1977)
ஈழத் தந்தை செல்வா என்று உலகத் தமிழர்களால் அழைக்கப்படும் மாபெரும் தலைவரும், அறவழிப் போராட்ட நாயகருமான சா.ஜே.வே. செல்வநாயகம் ஆவார். இவர் 31.3.1898 அன்று மலேசியா நாட்டின் ஈப்போ நகரில் பிறந்தார்.
தனது நான்காம் வயதில் பெற்றோர்களுடன் இலங்கை வந்தடைந்தார். இவர் இலண்டன் பல்கலைக் கழகத்தில் பயின்று பட்டம் பெற்றார். கல்லூரிப் பேராசிரியராகவும், குடிசார் வழக்குரைஞராகவும் பணியாற்றினார்.
இவர் இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காக இலங்கைத் தமிழ் தேசிய இயக்கத்தை தொடங்கி பாடுபட்டார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இலங்கைத் தமிழர்கள் உரிமைக்கு குரல் கொடுத்தார். இருபதாண்டுகளுக்கு மேல் தமிழ்த் தேசியவாதியாக இலங்கையில் சிறந்த வகையில் போராடியவர். அமைதி வழியில் அறப்போர் கண்டு பல வெற்றிகளை பெற்றவர். அவருடைய அறவழிப் போட்டம் நசுக்கப்பட்டதே பி்னனாளில் ஆயுதப் போராட்டத்திற்கான தேவையை உருவாக்கியது.
தமிழ்நாட்டிற்கு வருகை தந்த தந்தை செல்வா தந்தை பெரியாரை சந்தித்து தனது பேரன்பை பகிர்ந்தார். தமிழர் தலைவர் 2024 ஆண்டு இலங்கை சென்றபோது தந்தை பெரியாரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.
இலங்கைத் தமிழர் உரிமைக்கு அறவழியில் போராடிய தந்தை செல்வா மறைந்த நாள் (26.4.1977) இன்று.
வாழ்க தந்தை செல்வா!

