புதுடில்லி, ஏப்.4 உ.பி.யில் குடிசை வீடு இடிக்கப்பட்டபோது, ஓடிச் சென்று புத்தகங்களை எடுத்துவந்த 8 வயது சிறுமி உச்ச நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்த்தார். உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் கடந்த மார்ச் 21-ஆம் தேதி சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். அப்போது ஒரு குடிசைக்கு அருகில் இருந்த கொட்டகை தீப்பற்றியதை தொடர்ந்து, அனன்யா யாதவ் என்ற 8 வயது சிறுமி தனது தாயிடம் இருந்து தன்னை விடுவிடுத்துக் கொண்டு குடிசைக்குள் ஓடினாள். பிறகு ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் கணிதப் புத்தகங்களை கொண்ட பள்ளிப் பையை எடுத்துக்கொண்டு வெளியே ஓடி வந்தார். இது தொடர்பான காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் அமர்வு 2.4.2025 அன்று ஒரு வழக்கு விசாரணையில் இந்த காட்சிப் பதிவு ஒவ்வொருவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தது.
இதுகுறித்து நீதிபதி புயான் கூறுகையில், “சமீபத்தில் புல்டோசர்களால் சிறிய குடிசைகள் இடிக்கப்படும் ஒரு காட்சிப் பதிவு வெளியாகியுள்ளது. இடிக்கப்பட்ட ஒரு குடிசையிலிருந்து ஒரு சிறுமி கையில் புத்தகங்களுடன் ஓடி வருவது ஒவ்வொரு வரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது” என்றார். அனன்யா யாதவ் அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படிக்கிறார். அனன்யா கூறுகையில், “எனது புத்தகங்களும் பையும் எரிந்துவிடுமோ என்று பயந்தேன். உடனே ஓடிச் சென்று அதை எடுத்துக் கொண்டு என் அம்மாவிடம் திரும்பினேன்” என்றார். 50 ஆண்டு களாக தங்கள் குடும்பம் பயன்படுத்தி வரும் 2,700 சதுர அடி நிலத்துக்காக அதில் இருந்த குடிசைகளை அதிகாரிகள் இடித்துவிட்டதாக சிறுமியின் தாத்தா ராம் மிலன் யாதவ் புகார் கூறினார்.
உயர் நீதிமன்ற வளாகம் மற்றும்
அண்ணா நகர் – பெசன்ட் நகர் பகுதிகளில் பன்னடுக்கு வாகன நிறுத்தம்
மாநகராட்சி துணைமேயர் தகவல்
சென்னை, ஏப்.4 சென்னை மாநக ராட்சி சார்பில் உயர் நீதிமன்றம், அண்ணா நகர், பெசன்ட்நகர் போன்ற பகுதிகளில் பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள் அமைக்கப்படும் என்று துணை மேயர் மு.மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
வாகன நிறுத்தம்
சென்னை தியாகராயநகர் பாண்டி பஜாரில் உள்ள பன்னடுக்கு தானி யங்கி வாகன நிறுத்தத்தில் போதிய வசதிகள் இல்லை. முறையாக பராமரிக் கப்படவில்லை. மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை என புகார்கள் எழுந்தன. இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவின் பேரில் மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ் குமார், அங்கு சென்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, பாண்டி பஜாரில் உள்ள நடைபாதை வணிக வளாகத்தை பார்வையிட்டு, அதை மேம்படுத்துவது குறித்து அலுவலர்களுடன் கலந்துரையாடி, அறிவுரைகளை வழங்கினார்.
ரூ.40 கோடியில் பன்னடுக்கு வாகன நிறுத்தம்
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தியாகராயநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பாண்டிபஜார் தணிகாசலம் சாலையில் மாநகராட்சி சார்பில் ரூ.40 கோடியில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.
512 இரு சக்கர வாகனங்கள், 213 கார்களை தானியங்கி முறையில் நிறுத்தும் வகையில் இந்த வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு: இந்த வாகன நிறுத்தத்தை பராமரிக்கும் பணி தனியாரிடம் வழங்கப்பட்டது. அவர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர். வழக்கு முடியும் தருவாயில் உள்ளது. நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு இந்த வாகன நிறுத்தம் சிறப்பாக இயக்கப்படும்.
மேலும், வாகன நிறுத்த சேவைகளை மேம்படுத்த வட்டார அளவில் புதிய ஒப்பந்தங்களை போட இருக்கிறோம். பெசன்ட்நகர், அண்ணாநகர், உயர் நீதிமன்ற வளாகம் போன்ற பகுதிகளில் மாநகராட்சி சார்பில் பன்னடுக்கு வாகன நிறுத்தங்களை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.