“தந்தை பெரியாரின் சமூக நீதிப் போர்” கருத்தரங்கம் பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 466ஆவது வார நிகழ்வாக 29-03-2025 அன்று இரவு 7 மணிக்கு கொரட்டூர், தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளைகழக அலுவலகத்தில் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புடன் ஆவடி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் க.இளவரசன் முன்னிலையில் நடைபெற்றது.முன்னதாக ‘அஞ்சா நெஞ்சன் அழகிரி’ அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்தை தி.மு.க.தலைமைகழக பேச்சாளர் மா.வள்ளிமைந்தன், மேனாள் நகர மன்ற உறுப்பினர் சு.தேவேந்திரகுமார் தலைமையில் திறந்து வைத்து உரையாற்றினார்.நிகழ்வில் கருப்பசாமி, ஆறுமுகம், சுமதி மணி, பிச்சை மணி, மணி சுமதி, புஷ்பா, சி.ஜெயந்தி, வழக்குரைஞர் துரை வர்மன், சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.இறுதியாக மாணவர் கழகம் சி.அறிவுமதி நன்றி கூறினார்.
“தந்தை பெரியாரின் சமூக நீதிப் போர்” – பாசறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books