கும்முடிப்பூண்டி கழக மாவட்டத்தில் நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் கிளைக் கழகங்கள் அமைக்க முடிவு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பொன்னேரி, ஏப். 1- கும்முடிப்பூண்டி கழக மாவட்ட கலந்து ரைடல் கூட்டம் மாவட்ட தலைவர் புழல் தா.ஆனந்தன் தலைமையில் பொன்னேரி கலைஞர் அரங்கில் 30.3.2025 அன்று காலை 10 மணிக்கு நடந்தது.

மாவட்ட தலைவர் புழல் த.ஆனந்தன், மாவட்ட செயலாளர் ஜெ. பாஸ்கரன் ஆகியோர் உரையாற்றிய பிறகு மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம் உரையாற்றினார்.

கழக தலைவர் ஆசிரியர் அவர்கள் 92 வயதிலும் ஆஸ்திரேலியாவில் அயராது பணி செய்து உள்ளார். அது போல் நாமும் தொடர்ந்து இயக்க பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்,

மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்கள் தோறும் கிளை கழகங் கள் அமைப்பது, தெரு முனை கூட்டங்கள் நடத்துவது, இயக்க ஏடுகளுக்கு எப்படி சந்தா சேர்ப்பது என்பது குறித்து விளக்கமாக பேசினார்.

தீர்மானங்கள்

ஒன்றியங்கள் தோறும் கிளை கழகங்கள் ஏற்படுத்துதல் இல்லங்கள் தோறும் கழக உறுப்பினர்களை மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர் சந்தித்தல்
மாவட்ட புதிய பகுதிகளில் தெருமுனை கூட்டங்களை ஏற்பாடு செய்தல் விடுதலை உள்ளிட்ட கழக ஏடுகளுக்கு சந்தா தாரர்களை உருவாக்குவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பங்குபெற்றோர்

பொன்னேரி நகர தலைவர் வே.அருள், புழல் ஒன்றிய கழக செயலாளர் வடகரை உதயகுமார், பொதுக்குழு உறுப்பினரும், சோழவரம் ஒன்றிய கழக தலைவருமான ந.கஜேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர், சோழவரம் ப.சக்ரவர்த்தி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் தோழர் டார்வி, பொன்னேரி வினோத், மாவட்ட மகளிரணி தலைவர் பொன்னேரி செல்வி, பொன்னேரி நகர இளைஞ ரணி செயலாளர் எழில், பொன்னேரி ஹேமந்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *