நாகர்கோவிலில் பொதுக்கூட்டம் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

1 Min Read

நாகர்கோவில், மார்ச்31- நாகர்கோவில் மாநகரம் மற்றும் தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்து தொடக்கவுரையாற்றினார்.

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு இரா. குணசேகரன், கழக வளர்ச்சிப்பணிகள், எதிர்கால பிரச்சாரத் திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். மாவட்ட கழகத் துணைத் தலைவர் ச. நல்ல பெருமாள், காப்பாளர்கள் ஞா.பிரான்சிஸ், ம.தயா ளன், கழக மாவட்ட துணைச் செயலாளர் சி. அய்சக் நியூட்டன், இளை ஞரணி செயலாளர் இரா.இராஜேஷ், கோட்டாறு பகுதி தலைவர் ச.ச. மணிமேகலை, ஆகியோர் உரையாற்றினர். தோழர்கள் அந்தோனி, கலைப்பிரியன் பெனடிக்ட் மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்

தந்தை பெரியாருடைய கொள்கையை உலகமய மாக்க ஓயாது உழைக்கும் திராவிடர்கழக தலைவர் ஆகிரியர் கி.வீரமணி அவர்கள் ஆஸ்திரேலிய நாட்டில் பெரியாருடைய கருத்துக்களை பரப்பிவரும் தலைவருக்கு வாழ்த்து தெரிவிப்பது,
சிதம்பரத்தில் நடை பெற்ற திராவிடர்கழகப் பொதுக்குழு தீர்மானங் களை முழுமனதாக ஏற்று வரவேற்று குமரி மாவட்டத்தில் செயல் படுத்துவது, கழக பொதுக்கூட் டங்கள் நாகர் கோவி லில் நடத்துவது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *