ஸ்டாலினும்-சோதிடனும்!

1 Min Read

அரசியல்

சோவியத் ஒன்றியத்தின் தலைவர் மார்ஷல் ஸ்டாலினுக்கு தெய்வீகத்திலும் அதைப் பற்றிய குருட்டுக் கொள்கைகளிலும் அறவே நம்பிக்கை கிடையாது. முக்கியமாக சோதிடப் புரட்டுகளை வெறுத்தொதுக்குபவர். சோதிடத்தில் அவருக்குக் கொஞ்சங்கூட நம்பிக்கையில்லை. சோதிடர்களை வெறுப்பவர் – இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சியுள்ளது.

ஸ்டாலின் பிறந்த ஊரான டிப்ளிசில் பிறந்த ஓர் சோதிடன் புரட்டுச் சோதிடம் கூறிச் திரிந்த குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தான். அவன் சிறையிலிருந்தபடியே 1938ஆம் ஆண்டு மார்ஷல் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதி, தன்னை மன்னிக்குமாறு மன்றாடிக் கேட்டுக்கொண்டான்.

இக்கடிதத்தை மார்ஷல் ஸ்டாலின் பெற்றதும் அதே கடிதத்தின் ஓர் ஓரத்தில் “மன்னிப்பு இல்லை. சோதிடம் கூறுவது மிக மிகக் கொடியது” என்று குறிப்பெழுதி திருப்பி அனுப்பிவிட்டார்.

(டைம்ஸ் ஆப் இந்தியா)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *