கழிப்பறையை சுத்தம் செய்ய வேண்டும்! பிரதமர் முன்பு புரட்சி செய்த சிறுவன்

1 Min Read

ஆசிரியர்கள் எங்களின் வேண்டுகோளை அலட்சியப் படுத்துகிறார்கள். நீங்கள் தான் சரி செய்ய வேண்டும் என்று கழிப்பறை பழுது குறித்து நேரடியாக பிரதமரிடம் புகார் தெரிவித்தான் ஒரு மலேசிய சிறுவன்.

மலேசியாவின் போர்க் மாகாணத்திற்கு ஆய்வுப் பணிக்காக அந்நாட்டுப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் சென்றிருந்தார்.

அப்போது அங்குள்ள பள்ளி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குழந்தைகளிடம் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு சிறுவன் “மன்னிக்கவும், நீங்கள் பிரதமர் – நீங்கள் கூறினால் எல்லோரும் கேட்பார்கள்தானே” என்று கேட்டான்.

பிரதமரும். “ஆமாம். உங்களது தேவை எதுவும் உண்டா? நான் செய்து வைக்கிறேன்” என்று கனிவோடு கூறினார்.

இந்தியா, ஞாயிறு மலர்

அதற்கு அந்தச் சிறுவன், “எங்கள் பள்ளியில் இரண்டு கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. அதிலும் ஒன்று சரிவர வேலை செய்யவில்லை.

கண்டுகொள்ளாத ஆசிரியர்கள் இதனால் நாங்கள் பெரிதும் அவதிக்குள்ளாகிறோம்.
இது தொடர்பாக ஆசிரியரிடம் புகார் தெரிவித்தோம். ஆனால் அவர்களோ அவர்களுக்கென தூய்மையான கழிப்பறை இருப்பதால் எங்கள் கழிப்பறை பழுதாகி இருப்பது பற்றி கவலைப்படவில்லை.

ஆகவே உங்களிடம் இந்த வேண்டுகோளை வைக்கிறேன்” என்று கூறினான். உடனடியாக பிரதமரை அந்தச்சிறுவன் சிறுவர்கள் பயன்படுத்தும் கழிப்பறைக்கு அழைத்துச்சென்று காண்பித்தான்.
இதனை அடுத்து பிரதமர் பள்ளி நிர்வாகத்திடம் கேட்க அவர்களும் சில நடைமுறைப் பிரச்சினைகள் உள்ளன. ஒப்புதல் தரும் அதிகாரி விடுப்பில் சென்றுவிட்டதால் எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்று கூறினர்.

உடனடியாக அங்கிருந்த சுகாதார அதிகாரியை அழைத்து அவரது ஒப்புதல் கடிதத்தை வாங்கிக் கொடுத்து வேலையை முடித்து நாளை பிள்ளைகளின் பயன்பாட்டிற்கு தூய்மையாக இருக்கவேண்டும் என்று கடிந்து கொண்டார். இதனை அடுத்து வேலை துவங்கி முடிக்கப்பட்டு கழிப்பறை பயன்பாட்டிற்கு வந்தது.

இந்த நிலையில் சிறுவன் பிரதமருக்கு நன்றி கடிதம் அனுப்பி உள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *