அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்த திட்டமா? ஒன்றிய அரசு வெளியிட்ட தகவல்

viduthalai
1 Min Read

புதுடில்லி, மார்ச் 20 இந்தியாவில் பணியாற்றும் ஒன்றிய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உள்ளது. அதேவேளை, அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவின.

இந்நிலையில், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்த ஒன்றிய அரசிடம் திட்டம் உள்ளதா? என்று மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு ஒன்றிய அரசு தரப்பில் எழுத்துப்பூர்வ பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் இல்லை, ஓய்வு வயதை குறைக்கும் திட்டமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் வெடித்த கலவரம்..
மணிப்பூரில் உச்ச கட்ட பரபரப்பு

மணிப்பூர் சூரசந்த்பூரில் ஹமர் பழங்குடியினத் தலைவர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹமர் மற் றும் ஜோமி பழங்குடியினர் இடையே மோதல் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மீண்டும் மோதல் வெடித்தது… ஜோமி பழங்குடியினரின் கொடியை ஏற்ற ஹமர் பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் வன்முறை ஏற்பட்டது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில், கடைகள் சூறையாடப்பட்டன. காவல்துறையினர் போராடி கலவரத்தைக் கட்டுப்படுத்திய நிலையில், சூரசந்த்பூரில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேகாலயாவில் நில நடுக்கம்

ஷில்லாங் மார்ச் 20 மேகாலயாவில் உள்ள கிழக்கு காரோ மலைகள் பகுதியில் நேற்று (19.3.2025) திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேகாலயாவில் நேற்று (19.03.2025) மாலை 5.41 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மய்யம் தெரிவித்துள்ளது. சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 25.65 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 90.89 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக் கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *