தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் நினைவு நாள்

Viduthalai
2 Min Read

அன்னையார் சிலைக்கு மாலை அணிவித்து நினைவிடத்தில் மரியாதை

சென்னை, மார்ச் 16- தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் 47ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (16.3.2025) அவரது சிலைக்கு மாலை அணிவித்து, நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

அன்னையார் சிலைக்கு மலர் மாலை
தந்தை பெரியாரை 95 ஆண்டுகாலம் வாழ வைக்கத் தன்னை அர்ப்பணித்த தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாளான இன்று (16.3.2025) காலை 10 மணிக்கு சென்னை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு திராவிடர் கழக மகளிரணியினர் மற்றும் கழகத் தோழர்கள் பெருந்திரளாக ஊர்வலமாகச் சென்று மலர் மாலை அணிவித்தனர்.

அய்யா, அம்மா நினைவிடங்களில் மரியாதை
இதையடுத்து பெரியார் திடலில் அமைந்திருக்கும் தந்தை பெரியார் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திராவிடர் கழக மகளிர், அணியினர் பாசறையினரால் அன்னை மணியம்மையார் நினைவிடம். சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடம், தந்தை பெரியார் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
திராவிடர் கழகம், திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிட தொழிலாளரணி, பெரியார் மணியம்மை மருத்துவமனை, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல அமைப்பு, திராவிடன் நிதி, பெரியார் அய்.ஏ.எஸ்., பயிற்சி மய்யம், பெரியார் நூலக வாசகர் வட்டம் ஆகியவற்றின் சார்பில் அன்னை மணியம்மையார் நினைவிடத்தில மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

பங்கேற்றோர்
இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், செயலவைத் தலைவர் ஆ.வீரமர்த்தினி, மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், மேனாள் மாவட்ட நீதிபதி இரா.பரஞ்சோதி, திராவிடன் நிதி பொது மேலாளர் அருள்செல்வன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், துணைத் தலைவர் பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், வழக்குரைஞர் சு.குமாரதேவன், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் சோ.சுரேஷ், சி.வெற்றிச்செல்வி, க.பெரியார் செல்வி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன்,

மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள்
தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, பெரியார் யுவராஜ், கரு.அண்ணாமலை, விருகை செல்வம், வெ.கண்ணன், டி.ஆர்.சேதுராமன், ச.மாரியப்பன், அரங்க.இராஜா, அரும்பாக்கம் சா.தாமோதரன், மயிலை பாலு, பா.மேகராஜன். வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், கி.இராமலிங்கம், சி.பாசுகர், நா.பார்த்திபன், சி.காமராஜ், கோ.தங்கமணி, சொ.அன்பு, அ.புகழேந்தி, த.மு.யாழ்திலீபன், சு.பெ.தமிழமுதன்.
சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வேலூர் பாண்டு, ஆவடி – பூவை தமிழ்ச்செல்வன், உடுமலை வடிவேல், பெரியார் மாணாக்கன், க.கலைமணி, வை.கலையரசன், சக்திவேல், முகப்பேர் முரளி, படப்பை சந்திரசேகரன், திருவொற்றியூர் பெ.செல்வராசு, ஓவியர் பெரு.இளங்கோ, சரவணன், ச.சனார்த்தனன், மு.நா.இராமண்ணா, இருதயநாத், தஞ்சாவூர் கே.கருணாநிதி, ப.பிரசாத், நம்பியூர் இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

கழக மகளிரணி
இறைவி, சண்முகலெட்சுமி, மா.தமிழரசி, சீர்த்தி, செ.பெ.தொண்டறம், நூர்ஜகான், மு.பவானி, வி.வளர்மதி, த.மரகதமணி, செ.உமா, ராஜேஸ்வரி, இ.இந்திரா, பூங்குழலி, இலக்கியா, முகப்பேர் செல்வி, பெரியார் பிஞ்சுகள் மகிழன், பிரபு, யாழிசை மற்றும் திரளான மகளிர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *