கும்பமேளாவின் உபயம்!

1 Min Read

யமுனை நதியில் 1300 டன் கழிவுகள் அகற்றமாம்!

புதுடில்லி, மார்ச் 6 கடந்த 10 நாட்களில் மட்டும் யமுனா நதியில் இருந்து 1300 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன.
டில்லியின் நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் பர்வேஷ் வெர்மா, நேற்று (5.3.2025) படகில் சென்றபடி யமுனா நதியை ஆய்வு செய்தார். டெல்லி சட்டமன்ற தேர்தலின்போது யமுனையை சுத்தப்படுத்துவோம் என்று பா.ஜனதா தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. பா.ஜனதா அரசு பதவியேற்ற பின்பு வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த ஆய்வுப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் அமைச்சர் கூறுகையில், “கடந்த 2023-ஆம் ஆண்டு டில்லியில் வெள்ளப் பெருக்கால் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது நதியும், வெள்ளப்பாதை அடைப்புகளும் துப்புரவு செய்து சீர்செய்யப்பட்டு உள்ளதால் எதிர்காலத்தில் வெள்ளச்சேதம் தவிர்க்கப்படும்.
கடந்த 10 நாட்களில் மட்டும் யமுனா நதியில் இருந்து 1300 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன. ஆற்றில் கழிவுகளை வெளியேற்றும் 18 முக்கிய வடிகால் பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படுவதன் மூலம் யமுனை முற்றிலும் மாசடைவதில் இருந்து மீட்கப்படும்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *