‘பெரியார் அரசு மருத்துவமனை’ என பெயர் சூட்டிய முதலமைச்சருக்குப் பாராட்டு!

1 Min Read

சென்னை கொளத்தூர் பெரியார் நகரில் ரூ.210 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனைக்குப் ‘பெரியார் அரசு மருத்துவமனை’ என்று பெயர் சூட்டியமைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, திராவிடர் கழகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துப் பொன்னாடை அணிவித்தார் தமிழர் தலைவர். நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு, ஹிந்தித் திணிப்புப் போன்ற பிரச்சினைகளில், தமிழ்நாடு அரசின் தொடர் செயல்பாடுகளுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

மார்ச் 2 ஆம் வாரத்தில், தமது ஆஸ்திரேலிய பயணம் மேற்கொள்ளவிருக்கும் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் ெதரிவித்தார். உடன் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் (சென்னை, 6.3.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *