சென்னை கொளத்தூர் பெரியார் நகரில் ரூ.210 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனைக்குப் ‘பெரியார் அரசு மருத்துவமனை’ என்று பெயர் சூட்டியமைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, திராவிடர் கழகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துப் பொன்னாடை அணிவித்தார் தமிழர் தலைவர். நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு, ஹிந்தித் திணிப்புப் போன்ற பிரச்சினைகளில், தமிழ்நாடு அரசின் தொடர் செயல்பாடுகளுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.
மார்ச் 2 ஆம் வாரத்தில், தமது ஆஸ்திரேலிய பயணம் மேற்கொள்ளவிருக்கும் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் ெதரிவித்தார். உடன் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் (சென்னை, 6.3.2025)