சென்னையில் செயல்பட்டு வரும் எச்.சி.எல். அய்.டி. நிறுவனத்தில் மார்ச் 5ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் இந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் அம்பத்தூரில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்தியா உள்பட வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் முன்னணி அய்டி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் உள்ளது.
இந்நிலையில் தான் தற்போது எச்சிஎல் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:
பிராசஸ் அசோசியேட்
தற்போதைய அறிவிப்பின்படி எச்சிஎல் நிறுவனத்தில் Process Associate பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு முன் அனுபவம் என்பது தேவையில்லை. இந்த பணிக்கு 2024ஆம் ஆண்டில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். குறிப்பாக பிகாம், பைனான்ஸ் பிரிவில் படிப்பை முடித்தவர்களுக்கு முன்னுரிமை என்பது வழங்கப்படும். பிஇ, பிடெக் படிப்பை முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்க முடியாது. மாறாக பிற பிரிவில் டிகிரி முடித்தவர்களுக்கு சில முக்கிய தகுதிகள் என்பது இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும். ஒரு நிமிடத்தில் 30 வார்த்தைகள் 90-95 சதவீத பிழைகள் இன்றி டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும். MS Office-இல் Word, Excel உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.நல்ல அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் மற்றும் Interpretation skills இருக்க வேண்டும். அதேபோல் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் என்பது இருக்க வேண்டும். அதோடு விண்ணப்பதார்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் திறமை என்பது இருக்க வேண்டும். இங்கிலாந்து முறைப்படி சுழற்சி முறையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு
இந்த பணிக்கான நேர்முகத் தேர்வு என்பது மார்ச் 5ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை 3 நாட்கள் நடக்கும். இந்த 3 நாட்களும் காலை 11.30 மணி முதல் மதியம் 3 மணி வரை நேர்முகத் தேர்வு நடைபெறும். நேர்முகத் தேர்வில் பங்கேற்க விரும்புவோர் 8, South Phase, MTH Road, Ambattur Industrial Estate, Ambattur, Chennai, Tamil Nadu 600 058 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் அம்பத்தூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அலுவலகத்தில் இருந்து 30 கிலோமீட்டர் சுற்றளவுக்கு வாகன வசதி என்பது ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு வாகன சேவை இலவசமாகும்.