திருச்சுழி அருகே 8-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிலை கண்டெடுக்கப்பட்டது

1 Min Read

அரசியல்

விருதுநகர், ஜூலை 11 திருச்சுழி அருகே 8-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிலை கண்டெடுக்கப்பட்டது. திருச்சுழி தாலுகா முக்குளம் அருகே சிறுவனூர் கிராமத்தின் காட்டுப் பகுதியில் பழைமையான சிற்பங்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் படி வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் தாமரைக்கண்ணன், ராஜபாண்டி, நடராஜன், பாண்டியநாடு பண்பாட்டு மய்ய தொல்லியல் கள ஆய்வா ளரான சிறீதர் ஆகியோர் அங்கு சென்றனர். 

அப்போது அங்குள்ள சிற்பங் களை ஆய்வு செய்த போது அது 

8-ஆம் நூற்றாண்டை சேர்ந்த முற்கால பாண்டியரின் சிற்பங்கள் என்பது தெரியவந்தது.  இங்கு காணப்படும் சிலையானது 4 அடி உயர கருங்கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிலை கண்களை பாதியளவு மூடிய படியும், உதடுகளில் சிறிய புன்னகையுடனும் முற்கால பாண் டியருக்கே உரிய கலைநயத்துடன் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள் ளது.மேலும் தற்போது கிராமமக்கள் அவ்வப்போது வந்து வழிபடும் ஒன்றாக இருந்து வருகிறது. இங் குள்ள சிற்பங்களின் வடிவமைப்பை வைத்து பார்க்கும்போது 1,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்த புத்தர் சிலையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *