ஆய்வு நிறுவனமான அக்ஸாஸ் நவ் ஆய்வறிக்கையின் படி 2024 ஆம் ஆண்டு உலகலாவிய இணையதளத் தடைகள் செய்த நாடுகளில் உலகின் மிகபெரிய ஜனநாயக நாடு என்று பெயரெடுத்த இந்தியாதான் முதலிடத்தில் இருந்தது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம் தனிமனித பேச்சு மற்றும் கருத்துரிமை இந்தியாவில் முற்றிலும் பறிக்கப்பட்ட ஆபத்து ஒன்றிய பாஜகவினால் ஏற்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு மியன்மாரில் உள்ளநாட்டு புரட்சிப்படையினரின் தகவல் பரவலைத் தடுக்க – ராணுவ ஆட்சி நடைபெறும் அங்கு அதிக இணையதளத் தடைகள் ஏற்படுத்தப் பட்டன. இருப்பினும் அவை இந்தியாவை விட குறைவானது ஆகும்
கருத்துரிமை இழப்பு
“16 மாநிலங்கள் மற்றும் [யூனியன்] பிரதேசங்களில் உள்ள மக்கள் தங்களின் கருத்துரிமையை இழந்துள்ளனர்
இந்தியாவில் மணிப்பூர் (21), அரியானா (12), மற்றும் ஜம்மு & காஷ்மீர் (12) ஆகிய மாநில அரசுகள் இணையதள தடை விதித்தலில் முதலிடம் வகிக்கின்றனர்” என்று அறிக்கை தெரிவித்தது. “84இல், 41 தடைகள் போராட்டங்களுடன் தொடர்புடையவை, மற்றும் 23 சமூக வன்முறையுடன் தொடர்புடையவை.”
2024இல் உலகளவில் 296 இணையத் தடைகள் நடந்ததாக அறிக்கை கண்டறிந்துள்ளது. இந்தியாவில் மொத்த 84 தடைகள் இவற்றில் 28 சதவீதம் ஆகும். மியான்மரில் 85 தடைகள் விதிக்கப்பட்டன, இவற்றில் 11 மற்ற நாடுகள் மற்றும் குழுக்களால் விளைந்தன: “சீனா மியான்மர் பகுதிகளில் இரண்டு தடைகளை விதித்தது.
தாய்லாந்து நான்கு, தடைகளை விதித்துள்ளது. முக்கியமாக இந்த நாடுகள் அவர்கள் நாடுகளில் தடை விதிக்கவில்லை. மாறாக மியன்மாரில் ராணுவப் புரட்சிக் குழுக்கள் உள்ள பகுதிகளில் இவர்கள் தரும் இணையதள சேவைகளை தடைசெய்துள்ளன.
தேசிய ஒற்றுமை அரசாங்கம் (NUG), மியான்மர் தேசிய ஜனநாயக கூட்டணி இராணுவம் (MNDAA), மற்றும் தா’அங் தேசிய விடுதலை இராணுவம் (TNLA) போன்ற புரட்சிபப்டைகள் அடங்கியப் பகுதிகளில் தடை விதித்துள்ளன.
விமர்சனத்திற்குள்ளாகியது
தேர்வுகளின் போது வினாத்தாள்கள் கசியாமல் இருக்க இந்தியாவில் இணையதளம் தடைசெய்யப்பட்டது மிகவும் விமர்சனத்திற்குள்ளாகியது.
2024இல் பல்வேறு போட்டித் தேர்வுகள் நடந்த போது இந்தியா தடைகளை விதித்தது. ஜார்க்கண்டில் நடந்த போட்டித் தேர்வுகளின் போது, செப்டம்பர் 22 காலை முதல் மதியம் வரை அய்ந்தரை மணி நேர காலப்பகுதியில் தடைசெய்யப்பட்டது.
அதே மாதத்தில், அசாமும் அரசு தேர்வுகளுக்காக பெரும்பாலான மாவட்டங்களில் இதே போன்ற தடைகளை விதித்தது. ஜனவரியில் பொது சேவை ஆணைய தேர்வுக்காக ராஜஸ்தான் ஒரு தடை ஏற்படுத்தியது.
அபராதம் விதிக்கும் சட்டம்
பொதுவாக தேர்வுகளின் போது பல்வேறு நாடுகள் தடையில்லா மின்சாரம், போக்குவரத்து மற்றும் முக்கியமாக அதிவேக இணையதள சேவைகளை வழங்குகின்றன.
குறிப்பாக சீனா, கொரியா போன்ற நாடுகள் – தேர்வுகளின் போது எக்காரணம் கொண்டும் இணையதள தடைகள் ஏற்படக் கூடாது – அப்படி ஏற்படும் பட்சத்தில் சேவை நிறுவனங்களுக்கு மிகவும் அதிக அளவு அபராதம் விதிக்கும் சட்டம் அங்கு உள்ளது.
ஆனால் இங்கே தேர்வுகளின் போது விடைத்தாள் கசிந்துவிடக் கூடாது என்பதற்காக இணைய தளத் தடைகளை விதித்து அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்